ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடையும் கொரோனா தொற்று – மீண்டும் தடுப்பூசி வழங்கு பணி ஆரம்பம்

பிரான்ஸில் கொவிட் 19 பரவல் மீண்டும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், புதிய தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எளிதில் தொற்றுக்குள்ளாகுபவர்கள், நீண்டலாக நோயுடன் வாழ்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

நேற்று முதல் பகுதி பகுதியாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொவிட் 19 பரவல் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

கோடைகாலம் நிறைவுக்கு வந்ததில் இருந்து பல்வேறு நகரங்களில் கொவிட் 19 வைரஸ் மற்றும் அதன் திரிபு வகைகள் பிரான்சில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், எளிதில் தொற்றுக்குள்ளாகக்கூடிய நபர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!