இலங்கை

கெஹலியவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில் விசாரணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்  கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்காக சிறுவர்களை சிறைச்சாலைக்கு ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த வேன் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தால் வழங்கப்பட்டது.

அமைச்சரை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு வேன் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில்  சிறைச்சாலை திணைக்களம் இன்று நடத்திய விசாரணையின் போது, ​​குறித்த தினத்தில் போதியளவு பஸ்கள் போக்குவரத்துக்கு இல்லாத காரணத்தினால் குறித்த வேன் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!