பாலஸ்தீனர்களை இலக்கு வைத்து மரண தண்டனை: இந்தோனேசியா எதிர்ப்பு!
பாலஸ்தீனர்களை இலக்குவைத்து இஸ்ரேல் கொண்டு வந்துள்ள புதிய மரண தண்டனைச் சட்டத்தை இந்தோனேசிய அரசாங்கம் Indonesian government கடுமையாக விமர்சித்துள்ளது.
ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இஸ்ரேலிய யூதர்களுக்கு இன்றி பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் தண்டனை வழங்கும் அணுகுமுறை நீதிக்கு எதிரானது என இந்தோனேசியா குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய பாகுபாடு காட்டும் கொள்கை சர்வதேச மனித உரிமைகளை மதிக்காத செயல் என்றும் இது ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் வாழ்வுரிமைக்கான உலகளாவிய சட்டங்களை மீறும் செயல் எனவும் இந்தோனேசியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





