இலங்கை செய்தி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் மேலும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் வழங்கப்பட்டு 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருளை விநியோகிப்பதற்கான சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உரிமம் கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமூக வலைத்தளங்களில் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் இருந்து மேலும் 20 வருடங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் எரிபொருளை விநியோகித்து வருகிறது.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!