இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

இந்திய விமானங்கள் பறக்க தடை – பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்பு

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு 127 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளே காரணம் என குற்றம்சாட்டிய இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வௌியை பயன்படுத்த தடை விதித்து கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி உத்தரவிட்டது.

இதேபோல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வௌியை பயன்படுத்த ஒன்றிய அரசு தடை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 4 நாள் போர் மே 10ஆம் திகதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதால் பாகிஸ்தானுக்கு அதிகளவு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி வௌியாகி உள்ளது.

இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில்,

“பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட ஏப்ரல் 24ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திதி வரையிலான இரண்டுமாத காலத்தில் பாகிஸ்தானுக்கு 127 ரூபாய் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நிதி இழப்பு கிடையாது. ஆனால் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே