இலங்கை

இந்திய மீனவர்களின் அராஜக செயலால் அச்சத்தில் யாழ் மீனவர்கள்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து நேற்று (21)மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகள் தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது கரைக்கு அண்மையாக வந்த இந்தியன் இழுவைமடி படகுகள் அவர்களுடைய பெறுமதியான வலைகளை அறுத்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இந்தியன் இழுவைமடி படகுகளை விரட்ட முனைந்தும் பாதுகாப்பற்ற காரணங்களால் அறுந்த மிகுதி வலைகளுடன் உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளனர்த.

இரண்டு படகுகளுக்கு சொந்தமான வலைகள் எதுவும் மிஞ்சாததால் குறித்த இரண்டு படகுகளும் எந்தவொரு வலைகளும் இல்லாமல் வெறுமனே கரைக்கு திரும்பியதை காணக்கூடியதாக இருந்தது.

மிகுதி இரண்டு மீனவர்கள் சொற்ப வலைகளுடன் அவர்களும் கரைக்கு திரும்பி வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்தினரிடம் சம்பவம் குறித்து முறையிட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content