Site icon Tamil News

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று : ஒருவர் மரணம்!

இலங்கையில் அண்மைக்காலமாக மீண்டும் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்றைய தினம் புதிதாக 15 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது.

இதேவேளை  நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version