இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அதற்கேற்ப, தற்போதுள்ள அரசாங்கம் குறைந்துவிட்ட வெளிநாட்டு கையிருப்பை கணிசமாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக, உள்ளார்ந்த சிரமங்கள் இருந்தபோதிலும், அரசாங்கம் தடைகளைத் தாண்டி நாட்டை பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இட்டுச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற “நிலையான நிலத்திற்கான கூட்டுப்பாதை” ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)





