இலங்கை செய்தி

யாழில். தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் , மாணவி ஒருவரை ஆசியர் தாக்கியதில் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவிக்கு நேற்றைய தினம் பாடசாலையில் வைத்து ஆசிரியர் ஒருவர் அடித்து கண்டித்துள்ளார்.

அதனால் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டு, கை தூக்க முடியாத அளவுக்கு மாணவி பாதிப்படைந்திருந்தார். அதனை அடுத்து , பாடசாலை நிர்வாகம் மாணவிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்றில் நோவிற்கான எண்ணெய் ஒன்றினை வாங்கி பூசியுள்ளனர்.

மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னரும் , கை நோ வினால் அவதிப்பட்ட நிலையில் , பெற்றோர் அது தொடர்பில் விசாரித்த போது , மாணவி பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளார். அதனை அடுத்து மாணவியை பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!