இலங்கையில் ஒரே நேரத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு!
ஆறு இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
குழந்தையின் மரணம் நுரையீரலில் இரத்தம் கசிந்ததால் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ராகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் 06 குழந்தைகள் பிறந்த நிலையில், அந்த குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.
(Visited 17 times, 1 visits today)