இந்தியா

ஒடிசாவில் 11 வயது பழங்குடியின மாணவிக்கு அரசுபள்ளி ஆசிரியர்கள் இருவரால் நேர்ந்த கதி!

ஒடிசாவில் அரசுப்பள்ளியில் படிக்கும் 11 வயது மாணவியை தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11 வயது பழங்குடியின மாணவி ஒருவர் 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் திகதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து வீட்டில் கூறக்கூடாது எனவும் கடுமையாக மிரட்டியுள்ளனர். எனவே அச்சத்தில் மாணவி இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. ஆனாலும், அதன்பின்னர் அந்த சிறுமிக்கு அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு வைத்தியர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமிடம் விசாரித்தனர். அதன் பிறகு மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறி உள்ளார். இது குறித்து பெற்றோர் குண்டேய் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய பொலிஸார், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!