இலங்கை

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி, அஞ்சல் பொதிகளை விநியோகிப்பதற்கான விசேட சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அஞ்சல்மா அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.பி சத்குமார விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையுடன் வரும் நீண்ட வார இறுதி விடுமுறையில், வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரச விடுமுறை தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் விநியோகப் பிரிவுகளைக் கொண்ட அஞ்சல் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் மூலம் வெளிநாட்டுப் பொதிகள் சேவை மற்றும் பொதுப்பொதிகள் விநியோகம் தொடர்பான விசேட சேவையொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!