உடனடி போர் நிறுத்தம்: ரஷ்யா, சீனா கூட்டாக வலியுறுத்து!
மேற்காசிய போர்ச்சூழல் சூழல் மற்றும் அங்குத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து சீனா மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான இவ்விரு நாடுகளும், இந்தப் பிரச்சனையில் நேர்மையான மற்றும் சமநிலையான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
ஹார்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்யவும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் உடனடி போர்நிறுத்தம் அவசியம் எனவும் இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரு நாடுகளும் தற்போதைய இராணுவத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன.




