இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

  • February 20, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (20) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் […]

இலங்கை செய்தி

23,000 பட்டதாரிகளுக்கு இந்த வருடம் ஆசிரியர் நியமனம் உறுதி

  • February 20, 2026
  • 0 Comments

23000 ஆசிரியர்களை இணைத்துககொள்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த வருடத்திற்குள் அவர்களை சேவையில் இணைப்பதற்கான பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடம் உட்பட ஆசிரியர் இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கமைய திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி இவ்வாறு பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைக்கவுள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பா

பராலிம்பிக் போட்டி – புறக்கணிக்கப்படும் ரஷ்ய மற்றும் பெலாரஸ்ய வீரர்கள்!

  • February 20, 2026
  • 0 Comments

இத்தாலியில் பராலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நிலையில், ⁠ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் தேசியக் கொடிகள் மற்றும் கீதங்களுடன் போட்டியிட அனுமதிக்கும் முடிவைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து 10 வீரர்கள் கலந்துகொள்ள ஏற்பாட்டுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ரஷ்யாவின் நான்கு ஆண்டுகால உக்ரைன் படையெடுப்பு காரணமாக, சர்வதேச பாராலிம்பிக் குழு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி (Antonio […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை- கைதானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை  அண்மித்தது

  • February 20, 2026
  • 0 Comments

முழு நாடும் ஒன்றாக விசேட நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 99,540 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் குறித்து 137 சந்தேக நபர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 1,973 நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 1,639 […]

இந்தியா தமிழ்நாடு

மீண்டும் வெல்வோம்: தி.மு.க. ஆட்சி தொடரும் ! தமிழக முதல்வர் சூளுரை!

  • February 20, 2026
  • 0 Comments

“ சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து DMK ஆட்சி அமைப்போம். தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin சூளுரைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் […]

இந்தியா

அகமதாபாத் விமான விபத்து : மனித தவறால் நிகழ்ந்ததா? சர்ச்சையை ஏற்படுத்திய விசாரணை!

  • February 20, 2026
  • 0 Comments

இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த 240 பேரும் தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்திருந்தனர். ஒருவர் மாத்திரமே உயிர் தப்பினார். விமானத்தில் குறைப்பாடுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றபோதிலும் புலனாய்வாளர்கள் உரிய ஆதாரங்களை கண்டுப்பிடிக்கவில்லை. இந்நிலையில், விமானத்தை செலுத்திய விமானியின் உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். விமானி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. […]

இலங்கை செய்தி

டெல்லி, கொழும்பு உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் (Hyderabad House) இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகுந்த நட்புடன் வரவேற்ற இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இணைந்துகொண்டனர். இதன்போது இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று […]

இந்தியா தமிழ்நாடு

ஓ.பி.எஸ்சுக்கு தி.மு.க. வலை!

  • February 20, 2026
  • 0 Comments

தமிழக சட்டப் பேரவைக்குரிய தேர்தல் நெருங்கும்வேளை கூட்டணி அமைக்கும் முயற்சி தீவிரமாக இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை M.K. Stalin , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் OPS இன்று (20) சந்தித்து பேச்சு நடத்தியமை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையிலேயே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “ ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

பொன்சேகா வெத்து வேட்டு: மஹிந்த அணி கொதிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

“ முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா Sarath Fonseka கூறும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தெரிவித்துள்ளது. மக்களுக்காக அரசியல் செய்யும் நபர் அவர் அல்லர் எனவும், பகைமை அரசியலையே முன்னெடுத்துவருகின்றார் எனவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. இறுதிப்போரின்போது புலிகள் சரணடைவதற்கு மஹிந்த ராஜபக்ச சந்தர்ப்பமளித்தார் என பொன்சேகா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே புலிகளின் கோரிக்கையாக இருந்தது. எனினும், இராணுவத்தினரிடம் சரணடைய சொன்னதால் அத்திட்டம் தோல்வி அடைந்தது […]

உலகம்

சூடானில் உணவு கொண்டு சென்ற லொறிகளை குறிவைத்து தாக்குதல் – மூவர் பலி!

  • February 20, 2026
  • 0 Comments

சூடானின் தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது மூன்று உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுக்லி (Kadugli) மற்றும் டில்லிங் (Dilling ) நகரங்களுக்குச் செல்லும் வழியில் இந்த தாக்குதல்  நேற்று நடத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் மனிதாபிமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மனிதாபிமானப் படைகளை வேண்டுமென்றே குறிவைத்ததை அதிகாரிகள் கண்டித்துள்ளனர். இது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் […]

error: Content is protected !!