இலங்கை செய்தி

இந்தியா இலங்கை இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி ஆரம்பிக்கவுள்ளது

  • April 12, 2023
  • 0 Comments

SLINEX-2023 இந்தியா இலங்கை  இடையிலான முதற்தர இருதரப்பு கடற்படைப் பயிற்சி இம்முறை களியாட்டங்களுடன் நடைபெறுகின்றது. கொழும்பில் ஏப்ரல் 3-5 ஆம் திகதிவரை பல இடங்களில் நடைபெறும் கலாசார நிகழ்வுகள்,யோகா அமர்வுகளில் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு எமது நண்பர்கள் அனைவரையும் என இலங்கைக்கான இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,10ஆண்களையும் 5பெண்களையும் உள்ளடக்கிய நீச்சல் அணியினர் தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையான 29 கி.மீ தூரத்தினை 11 மணித்தியாலங்களில் கடந்துள்ளனர். இச்சாதனையுடன் அண்மைய மாதங்களில் இந்நீரிணையினைக் கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 […]

இலங்கை செய்தி

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்க மாட்டேன்

  • April 12, 2023
  • 0 Comments

தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்  மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். தாம்  பிரபலமானதை செய்வதற்கு அன்றி சரியானதைச் செய்வதற்காகவே இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரபலமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமே நாட்டுக்கு அழிவு ஏற்பட்டது  எனவும் தெரிவித்தார். முப்படைகளின்  தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (01) அநுராதபுரம் விமானப்படை முகாமில்  இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய படையணிகளை சந்தித்து உரையாற்றும் போதே இதனை […]

இலங்கையில் வேகமாக பரவிவரும் புதிய வகை நோய்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரு நோய்களும் பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் இருந்து நோய் அறிகுறி தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல் நிலை தொடர்பில் பெற்றோர்கள் அவதானம் செலுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற […]

இலங்கை செய்தி

கடவுச்சீட்டு தொடர்பில் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் கடவுச்சீட்டு ஒன்று காணாமல் போனால் விரைவாக அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்குமாறு அவர் கோரியுள்ளார். கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்துக்குள் காணாமல் போகுமாயின் அதற்காக 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும், கடவுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் காணாமல் போனால் அதற்காக 15 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த கடவுச்சீட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையம் ஊடாக குடிவரவு […]

இலங்கை செய்தி

விமானப்படை “ஹெரலி பெரலி” வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

  • April 12, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் சென்று  மூன்று மில்லியன் பலா மரக்கன்றுகளை நடும்  விமானப்படையின் “ஹெரலி  பெரலி”  வேலைத்திட்டத்தின் முதல் கட்டம் அநுராதபுரத்திலுள்ள விமானப்படை  முகாமில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில்  நேற்று  (01)  ஆரம்பித்து  வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும்  உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்படும்  பலா சார்ந்த  உற்பத்திகளுக்கான  உள்நாட்டு மற்றும்  வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும்  பலா சார்ந்த உணவு உற்பத்திகளை இலங்கை மக்கள் மத்தியில் பிரபல்யபடுத்துவதுமே இதன்  நோக்கமாகும். இந்த  வேலைத்திட்டத்தின் கீழ் […]

இலங்கை செய்தி

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று  காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 162,800 ரூபாவாக ஆகக் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுன் இப்போது 177,000 ரூபா ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் […]

இலங்கை செய்தி

இரணைதீவு வட்டாரக் கிளைத் தெரிவு, இன நல்லிணக்கத்தின் தொடக்கப் புள்ளி என சிறீதரன் எம்பி தெரிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கைத் தமிழ்  அரசுக் கட்சியின் இரணைதீவு வட்டாரக் கிளைக்கான  வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் (01), பூநகரி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் அவர்களின் தலைமையில், நாச்சிக்குடாவில் நடைபெற்றுள்ளது. இதன்போது வட்டாரக் கிளையின் புதிய தலைவராக அப்பகுதி முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான திரு.முகமதுமீரா சாய் சலீம் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை அப்பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் இன நல்லிணக்கத்துக்கான அடையாளமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

இலங்கை செய்தி

நாட்டில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமில்லை – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

ஜனாதிபதியாக தான் இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு அழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார் . அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் நேற்று முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை! பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு தண்ணீர் அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ இந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பாடசாலைக்கு செல்லும் குழந்தையின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 போத்தல் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் வெப்பநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல […]

இலங்கை செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கை அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு என்பனவற்றையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இதற்காக 135 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

error: Content is protected !!