30 அடி கீழே விழுந்து பெண் பலி
சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் மேம்பாலம் மீது இருசக்கர வாகனத்தில் சந்தோஷபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார்(21), மற்றும் அவரது அக்கா கலைச்செல்வி(26), இருவரும் பாலத்தில் மீதேறி பள்ளிகரணை நோக்கி வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி மேம்பாலத்தின் மேலிருந்து 30 அடி கீழே தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று பார்த்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வாகனத்தை ஓட்டி வந்த சந்தோஷ்குமாருக்கு […]













