ஆஸ்திரேலியா

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000 பேர் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெறுவார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருப்பவர்கள் பத்து வருட துயரங்களை அனுபவித்துள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏனைய 12000 குடியேற்றவாசிகளின் நிலை என்னவென இன்றைய ஆர்ப்பாட்டத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் காத்திருக்கும் நெருக்கடி

  • April 18, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன்படி வெப்பநிலை 0.8 பாகை செல்சியஸால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தைப் போலவே, லா நினா காலநிலை மாற்றமும் இதற்கு காரணமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள கடலில், தென்கிழக்கு டாஸ்மேனியாவிலிருந்து வடக்குப் பகுதி வரையிலான பகுதியில் வெப்பநிலை அதிகமாக அதிகரித்துள்ளது. கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பு பல எதிர்கால வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது.  

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

  • April 18, 2023
  • 0 Comments

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித உரிமை செயற்பாடு, இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான செயற்பாடு, குடிவரவு குடியழ்வு செயற்பாடுகளில் தமிழர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் சுஜன் செல்வன் சிட்னி மாநில தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.அதன்படி புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் சுஜன் செல்வன் […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் சீக்கிய ஊழியர்கள் மீது இன துஷ்பிரயோகம்: மனித உரிமைகள் ஆணையத்தில் நிறுத்தப்பட்ட முதலாளி!

  • April 18, 2023
  • 0 Comments

இன துஷ்பிரயோகம் தொடர்பாக முதலாளியை மனித உரிமைகள் ஆணையத்திற்கு  நியூசிலாந்தில் உள்ள இரண்டு சீக்கிய டிரக் சாரதிகள் வரவழைத்துள்ளனர். சீக்கியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று அழைத்த நிறுவனத்தின் மேலாளரின் இன ரீதியான துஷ்பிரயோகத்திற்கு எதிராக நியூசிலாந்தில் உள்ள இரண்டு சீக்கிய டிரக் சாரதிகள் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர். நிறுவனத்தின் மேலாளர் ரமிந்தர் சிங்கிடம் “சீக்கியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள்” என்று கூறியதாக கூறப்படுகிறது, அதே போல நிறுவனத்தின் மற்றொரு சக ஊழியரான நந்த்புரியின் கலந்துரையாடலை தடுத்து […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இருப்பிடத்தை இழந்த முதலைகள் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தொலைதூரப் பகுதி ஒன்று வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது. ஆஸ்திரேலியாவின் வடக்கில் இருக்கும் பகுதி ஒன்றிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சேர்ந்த சிறுவனை ஒருவரை முதலை கடித்து அவர் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றதாக தெரியவந்துள்ளது. முதலையால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு 17 வயதாகின்றது. வெள்ளம் காரணமாக முதலைகள் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளன. ஆகையால் முதலைகளால் மக்களுக்கு அபாயம் நேரிடலாம் எனக் கூறப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அரசாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதாக  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் $700m மதிப்பிலான கோகைன் போதைப்பொருள் மீட்பு

  • April 18, 2023
  • 0 Comments

மெக்சிகன் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சுமார் $700 மில்லியன் மதிப்புள்ள கோகோயின் (சுமார் 1bn AUD, £570m) நாட்டை அடைவதைத் தடுத்து நிறுத்திய இரகசிய நடவடிக்கையின் விவரங்களை ஆஸ்திரேலியாவில் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் என்று கூறப்படுகிறது. தென் அமெரிக்காவின் கடற்கரையில் போதைப்பொருள் அதிகாரிகள் 2.4 டன் போதைப்பொருளைக் கைப்பற்றியபோது ஆபரேஷன் பீச் நவம்பர் மாதம் தொடங்கியது.  

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இந்து கோவில் மீது தாக்குதல்

  • April 18, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேன், காலிஸ்தான் ஆதரவு ஆதரவாளர்களால் ஒரு முக்கிய இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோயிலில் சமீபத்திய தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பூசகர் மற்றும் பக்தர்கள் இன்று காலை அழைத்து எங்கள் கோவிலின் எல்லைச் சுவரில் நடந்த நாசம் குறித்து எனக்கு அறிவித்தனர் என்று கோவில் தலைவர் சதீந்தர் சுக்லா கூறியதாக தி ஆஸ்திரேலியா டுடே இணையதளம் தெரிவித்துள்ளது. இது குறித்து குயின்ஸ்லாந்து பொலிஸாருக்கு அதிகாரிகளுக்கு தகவல் […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- 6.9 ரிக்டர் ஆக பதிவு

  • April 18, 2023
  • 0 Comments

நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 152 கிமீ (94 மைல்) ஆழத்தில் இருந்ததாக USGS தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.மேலும் சேத பாதிப்பு பற்றிய எந்த விபரமும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் நான்கு பேரில் ஒருவர் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்துள்ளமையினால் தாம் கூடுதல் செலவினங்களைச் சுமக்க வேண்டியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு 150 முதல் 200 டொலர் வரை செலவழிக்க வேண்டியிருந்ததாகவும், தற்போது அது 400 முதல் 500 டொலர் வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர். எதிர்காலத்தில் வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டால், இந்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்

  • April 18, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா சிட்னியில் 32 வயதான இந்தியர் ஒருவரை கொலை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய பொலிஸாரால் அவர் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என்று சிட்னியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் 28 வயது துப்புரவுத் தொழிலாளியை நேற்று முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸாரையும் தாக்க முயன்றதால் முகமது […]

error: Content is protected !!