ஐரோப்பா

27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் – பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு!

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பெண் ஒருவரை 27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 37 வயதான திசாரா வெரகல என்பரே மேற்படி தண்டனையை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திககியன்று, கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில், நிரோதா நிவுன்ஹெல்லா என்ற பெண்ணை  (குற்றவாளியின் முன்னாள் மனைவி)  திசாரா வெரகல கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 2017 […]

அரசியல் இலங்கை செய்தி

போரை காட்டிக்கொடுத்தாரா மஹிந்த?

  • February 21, 2026
  • 0 Comments

“மஹிந்த ராஜபக்ச போரை காட்டிக்கொடுத்துவிட்டார் என Sarath Fonseka பொன்சேகா கூறுவது அபத்தமானது. போரை முடிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவே சிறப்பான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி Tissa Kuttiyarachchi தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ராஜபக்ச குடும்பம் தொடர்பில் பொன்சேகா கடும் வைராக்கியத்துடனேயே இருக்கின்றார். மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பொன்சேகா கதைப்பதில்லை. மாறாக ராஜபக்சக்கள் பற்றியே […]

உலகம்

ஈரான் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா!

  • February 21, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீத வரையறுக்கப்பட்ட தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியட்ட அவர், ஒரு ஒப்பந்தம் எட்டப்படுமா அல்லது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை உலகம் “அடுத்த, 10 நாட்களில் தெரிந்துகொள்ளும் […]

இலங்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • February 21, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு ஆரம்பக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தலானது இன்று காலை 08:00 மணி முதல் நாளை காலை 08:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா மாவட்டம் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல மற்றும் கந்தகெட்டிய […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

  • February 21, 2026
  • 0 Comments

உலகக்கிண்ண தொடரில் இன்று (21) ஆரம்பமாகும் சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் நியூசிலாந்து New Zealand மற்றும் பாகிஸ்தான் Pakistan ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இரு அணிகளும் சமபலம் படைத்த அணியென்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. தொடர்புடைய செய்தி……… சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!

அறிவியல் & தொழில்நுட்பம்

messenger வலைத்தளத்தின் செயல்பாட்டை நிறைவுக்கு கொண்டுவரும் மெட்டா நிறுவனம்!

  • February 21, 2026
  • 0 Comments

மெட்டா நிறுவனம், தனித்த மெசஞ்சர் வலைத்தளத்தை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் உதவிப் பக்கத்தில் உள்ள புதுப்பிப்பின்படி, மெசஞ்சர் வலைத்தளம் (messenger.com) ஏப்ரல் 2026 முதல் செயல்படுவதை நிறுத்திவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு, கணினியில் மெசஞ்சரை அணுக விரும்பும் பயனர்கள் அதற்கு பதிலாக பேஸ்புக் மூலம் உள்நுழைய வேண்டும். வலைத்தளம் அகற்றப்பட்டவுடன், மெசஞ்சர் வலைத்தளத்தைப் பார்வையிடும் பயனர்கள் தானாகவே facebook.com/messages க்கு திருப்பி விடப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பயனர்கள் Messenger மொபைல் பயன்பாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த மாகாணசபைத் தேர்தலை நடத்துக!

  • February 21, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara எம்.பி. தெரிவித்தார். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பினார். இந்நிலையிலேயே இந்தியா சென்று அந்நாட்டு பிரதமர் மோடியை சந்தித்தால் மட்டும் போதாது, ஜனநாயகத்தை நிலைநாட்ட இங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “ இலங்கையின் அண்டை நாடான இந்தியாவுடனான இராஜதந்திர […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் வசிக்கும் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு முக்கிய தகவல்!

  • February 21, 2026
  • 0 Comments

இரட்டை குடியுரிமை வைத்திருப்பவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழையும்போது செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது விலையுயர்ந்த உரிமைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று புதிய சட்டம் அறிவுறுத்துகிறது. இந்த சட்டம் வரும்  25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. இது இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளவர்கள் உள்பட பலரை பாதிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இரட்டைக் குடிமக்கள் காலாவதியான பிரித்தானிய கடவுச்சீட்டை புதிய நுழைவு விதிகளுக்கு பயன்படுத்தலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாக Ryanair நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. விமான நிறுவனங்கள் தங்கள் […]

செய்தி

மனித உரிமை விவகாரம் குறித்து ஐ.நா. பிரதானியுடன் பிரதி அமைச்சர் பேச்சு!

  • February 21, 2026
  • 0 Comments

பன்முகத்தன்மை கொண்ட சர்வதேச கட்டமைப்பிற்குள் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்பட இலங்கை தயாராக இருக்கின்றது என்று பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா.வின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – ஆண்ட்ரே பிரான்சுடன் Marc-André France நடைபெற்ற சந்திப்பின்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்புக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக பின்வரும் […]

இலங்கை செய்தி

மூன்று வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து!

  • February 21, 2026
  • 0 Comments

கண்டி ​​Kandy மாவட்டம், கம்பளை Gampola பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல Nagolla பகுதியில் வைத்தே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் […]

error: Content is protected !!