இலங்கை செய்தி

அமெரிக்க பசுபிக் கடற்படை தளபதி – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இடையே சந்திப்பு

  • February 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் அண்மைக்கால பாதுகாப்பு அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. டிட்வா புயல் அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்கு பிரதி அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். அத்துடன் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இயங்கி வந்த தமிழ் உணவகம் ஒன்றின் மோசமான செயற்பாடு – 10,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றுக்கு 10,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுத்தாலை (Southall) தளமாகக் கொண்ட உணவகம் ஒன்றில் ஈலிங் கவுன்சில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.  இதன்போது சுகாதாரம், பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அட்ரியன் பிசினஸ் சென்டரை தளமாகக் கொண்ட பாலாஜி ஃபுட்ஸ் லிமிடெட்டின்  (Balaji Foods Ltd)  இயக்குனர்   திலோகரம் கச்சாவா (Tilokaram Kachhawa)  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேகநபர்  மீது சரியான ஒப்புதல் இல்லாமல் […]

இலங்கை செய்தி

மாஹோ – ஓமந்தை ரயில் பாதை புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட இந்திய துணைத் தூதுவர்

  • February 21, 2026
  • 0 Comments

மாஹோ – ஓமந்தை ரயில் மார்க்க புனரமைப்பு பணிகளை இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் கலாநிதி சத்யன்ஜல் பாண்டே நேரில் சென்று பார்வையிட்டார். டிட்வா புயல் தாக்கத்தினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக இடம்பெற்று வருகிறது. 450 அமெரிக்க டொலர் செலவில் ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

  • February 21, 2026
  • 0 Comments

  2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சின் முன்பாக இவர்கள் மௌனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கு கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கங்களும், நிர்வாக கிராம உத்தியோகத்தர் சங்கங்களும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன. பொது நிர்வாக, மாகாண […]

இலங்கை

திருகோணமலை மார்பில் பீச் கடற்கரையில் குளிப்பதற்கு தடை!!

  • February 21, 2026
  • 0 Comments

திருகோணமலை மார்பில் பீச் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் கடலில் குளிப்பதற்கு முற்பட்டு வருவதாகவும் இதனால் உயிர் சேதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த அனர்த்தத்தை தடுக்கும் முகமாக மார்பில் பீச் பகுதியில் குளிப்பதற்கு தற்பொழுது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் மார்பில் பீச் கடற்கரைக்கு செல்வதற்கு பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற இதே வேளையில் குறித்த வீதி […]

இலங்கை செய்தி

அக்குரேகொட படுகொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

  • February 21, 2026
  • 0 Comments

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து சென்ற நபர் ஒருவர் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த அவர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் குற்றவாளியின் நெருங்கிய சகா என பொலிஸார் கூறுகின்றனர். இதற்கமைய, துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டுத் தப்பிச் […]

இந்தியா செய்தி

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்: காங்கிரஸ் வலியுறுத்து!

  • February 21, 2026
  • 0 Comments

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, காங்கிரஸ் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு நிறுத்திவைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் இந்திய-அமெரிக்க கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்களைப் பயன்படுத்தி, […]

இலங்கை செய்தி

பௌத்த மதத்தையோ மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது

  • February 21, 2026
  • 0 Comments

பௌத்த மதத்தையோ அல்லது எந்தவொரு மதத் தலைவர்களையோ இழிவுபடுத்த எவருக்கும் உரிமை கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திஸ்ஸமஹாராம, கமுனுபுரவில் உள்ள ஸ்ரீ விசுத்தராம விகாரையில் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (21) கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ நாட்டின் விகாரைக் கட்டமைப்புகள் தற்போது போதிய கவனமின்றி சிதைவடைந்து வருகிறது. அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளபடி பௌத்த மதத்தைப் போற்றிப் பாதுகாப்பதற்காக ரணசிங்க […]

உலகம் செய்தி

தாய்லாந்தில் பரவிவரும் இனந்தெரியாத வைரஸ் : 72 புலிகள் உயிரிழப்பு!

  • February 21, 2026
  • 0 Comments

தாய்லாந்தில் இனந்தெரியாத வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் 72 புலிகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் வடக்கு மாகாணமான சியாங் மாயில் (Chiang Mai) உள்ள வனவிலங்கு பூங்காக்களில் பிப்ரவரி 8 முதல் 19 வரை இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. கால்நடை அதிகாரிகளின் முதற்கட்ட சோதனைகளில் பூனைகளிடம் இருந்து வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இறந்த புலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (anine distemper virus) மற்றும், மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா  (Mycoplasma bacteria) தொற்றும்  […]

உலகம்

ஈரான் விவகாரம் – பொறுமையிழக்கும் ட்ரம்ப்!

  • February 21, 2026
  • 0 Comments

ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுமை இழந்து வருவதாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களுக்கு உத்தரவிடுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. ஈரரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இல்லையென்றால் கெட்ட விஷயங்களை” எதிர்கொள்ள நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எச்.ஆர். மெக்மாஸ்டர் (H.R. McMaster), “ஈரானிய ஆட்சிக்கு […]

error: Content is protected !!