பொழுதுபோக்கு

50 செகண்டுக்கு 5 கோடி வாங்கும் லேடி சூப்பர் ஸ்டார்…

  • November 1, 2025
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கம்பீரமாக வலம் வருகின்றார் நடிகை நயன்தாரா. 40 வயதை கடந்தாலும் இன்றைய இளசுகளுக்கு டஃவ் கொடுத்து, அவர்களை விடவும் அதிக படங்களில் நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். இவர் வாங்கும் சம்பளம் பற்றிய […]

உலகம் செய்தி

கனடாவில் தமிழ் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் – விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

  • November 1, 2025
  • 0 Comments

கனடாவில் தெற்காசிய மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களின் செயற்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வாறான கும்பல்களை சமாளிப்பதற்காக கூடுதலாக 150 காவல்துறை அதிகாரிகள் தேவைப்படுவதாக சர்ரே (Surrey) மேயர் கூறியுள்ளார். எங்கள் சமூகம் இவ்வளவு ஆழமாகப் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையளிக்கிறது. எங்களால் இனியும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது என மேயர் பிரெண்டா லோக் (Brenda Locke) நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 150 புதிய அதிகாரிகளை நியமிக்கும் கோரிக்கைக்கு இரு மட்ட […]

ஐரோப்பா செய்தி

லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – நீதிமன்றத்தில் முன்னிலையான பெண்!

  • November 1, 2025
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத 38 வயதான அந்த பெண் மீது திட்டமிட்ட திருட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவரை  காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம் முன்னதாக அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று ஆண்களில் ஒருவர் விடுதலை […]

இலங்கை

க. பொ.த உயர்தர பரீட்சை திகதி அறிவிப்பு – மேலதிக வகுப்புகளுக்கு தடை!

  • November 1, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க. பொ.த உயர்தர  பரீட்சைகள் வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 05 திகதிவரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் மேலதிக  கல்வி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் வரும் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்வு காலம் முடியும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் நடவடிக்கை – எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நீண்டகாலம் வசித்த மக்களும் நாடு கடத்தப்படும் அபாயம்!

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் அயர்லாந்து குடிமக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இவ்வருடத்தின் (2025)  ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில், 99 அயர்லாந்து குடிமக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக  அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) பிரிவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் வெளிநாட்டு பிரஜைகள் வசிப்பது, அங்கு பணிப்புரிவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏராளமான இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். இதன் பின்னணியில் இந்த […]

பொழுதுபோக்கு

ஹீரோ அவதாரம் எடுத்த லோகி…! டீசர் வேற மாதிரி இருக்கே…

  • November 1, 2025
  • 0 Comments

இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்கள் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் மாறுகின்றனர். அதேபோல் இயக்குனர்களும் நடிகர்களாக அவதார எடுக்கின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் DC படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. லோகி இதற்கு முன்னர் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் […]

ஐரோப்பா செய்தி

அயர்லாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியை குறிவைத்து தாக்குதல்!

  • November 1, 2025
  • 0 Comments

அயர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்கள் தங்கியிருந்த விடுதியில் மர்ம கும்பல் ஒன்று பட்டாசுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக விடுதியில் தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதில்  பல குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தின் ட்ரோகெடாவில் (Drogheda) நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்குச் சென்ற அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். மேலும் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து […]

பொழுதுபோக்கு

அஜித்தின் கையை கிழித்த ரசிகன்! 29 முறை அறுவை சிகிச்சை…. நீண்ட நாட்களுக்குப்பின் தல

  • November 1, 2025
  • 0 Comments

கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் அஜித் குமாரும் ஒருவர். சிவாஜி – எம்.ஜி.ஆர் இவர்களுக்கு ஒரு இடம் உண்டு. இவர்களை அடுத்து தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுபவர்கள் ரஜினி – கமல். அடுத்ததாக இளைய தலைமுறைகளுக்கு விஜய் – அஜித் அவர்கள் தான். இதில் அஜித் வித்தியாசமானவர். இவர் மற்ற நடிகர்களைப் போல் பட விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார், ஆடியோ லாஞ்ச், பட புரமோஷன்கள் என எதிலும் பங்கேற்க மாட்டார். ஆனாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் […]

இலங்கை செய்தி

கடந்த அரசாங்கங்களை விட NPP அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள மக்கள்!

  • November 1, 2025
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் ஊழலை நிவர்த்தி செய்வதில் திறம்பட செயல்படும் என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் நம்புவதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த அரசாங்கங்கள் ஊழலை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதாக 12.5 சதவீதமானோர் நம்பியதாகவும் அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களுக்கு ஊழல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக முன்னாள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  […]

ஐரோப்பா

உக்ரைனில் தாக்குதலுக்காக தடை செய்யப்பட்ட 9M729 ஏவுகணையை பயன்படுத்தும் ரஷ்யா

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் (INF Treaty) இருந்து வெளியேறக் காரணமாக இருந்த 9M729 க்ரூஸ் ஏவுகணையை (Cruise Missile) ரஷ்யா தற்போது உக்ரைனில் தாக்குதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கியேவ் (Kyiv) அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே 1987ல் கையெழுத்திடப்பட்ட INF ஒப்பந்தம், தரைவழி ஏவுகணைகளின் வரம்பைக் கட்டுப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் பல பத்தாண்டுகளாக அணுசக்திப் பாதுகாப்பின் முக்கிய தூணாக இருந்தது. ஆனால், 9M729 […]

error: Content is protected !!