இலங்கை செய்தி தமிழ்நாடு

7 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ்.மீனவர்கள்!

  • March 5, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணி கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீனவர்கள், ஏழு நாள்களின் பின்னர் தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்களின் படகு, நடுக்கடலில் இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த படகு, கடல் நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ். மீனவர்களை அவதானித்த தமிழக […]

செய்தி

ஈரான் தூதரகத்தில் குவியும் இலங்கை அரசியல் வாதிகள்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானிய உயர் தலைவரின் மறைவையிட்டு, கொழும்பிலுள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபப் புத்தகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் கையொப்பமிட்டனர். அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய உயர் தலைவர் மற்றும் ஈரானிய மக்களின் மறைவுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர், இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரசா டெல்கொஷ்ஷைச் சந்தித்துத் தமது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த […]

உலகம்

ஈரானுக்கு முடிவு கட்டுவோம்! கூட்டு தாக்குதல் தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கு விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. கூட்டு வான் வழி தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். “ நாம் இப்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் தலைமை வேகமாக சிதறி வருகிறது. கெட்டவர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போது கெட்ட விடயங்களே நடக்கும். அதனால்தான் அழிக்கின்றோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதற்ற நிலை உக்கிரமடைந்துவருகின்றது . இதனால் […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே மற்றுமொரு ஈரான் கப்பல்!

  • March 5, 2026
  • 0 Comments

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் மற்றொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. “ அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சகமும் கப்பலின் இருப்பை அறிந்துள்ளது. அதில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மேற்படி கப்பல் இலங்கை […]

செய்தி

மத்திய கிழக்கு வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித மந்திராலோசனை!

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வெளிவிவகார அமைச்சர்களுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். தொலைபேசி ஊடாகவே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனேயே அவர் கலந்துரையாடியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் மேற்படி நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். மேற்படி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து இலங்கை தொடர்ந்து ஆராய்வு!

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு […]

இலங்கை செய்தி

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புக்காக உரிய தலையீடு: இலங்கை உறுதி!

  • March 5, 2026
  • 0 Comments

“ இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். இந்து சமுத்திர அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (05) கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச எல்லையில் வைத்து அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து 32 […]

ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கு போர்: முக்கிய இரு பிரதமர்கள் விடுத்துள்ள கூட்டு அறிவிப்பு!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று கனடா Canada மற்றும் ஆஸ்திரேலியா Australia ஆகிய நாடுகளின் பிரதமர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் போர் நீடிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை எனக் கூறிய அவர்கள், போர் நிறுத்தத்தை பகிரங்கமாக வலியுறுத்தவில்லை. கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று கனடா பிரதமர் உரையாற்றினார். அதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர். […]

இந்தியா செய்தி

பதவி துறக்கிறார் பிஹார் மாநில முதல்வர்!

  • March 5, 2026
  • 0 Comments

பிஹார் Bihar மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் Nitish Kumar விரைவில் பதவி துறக்க உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மாநிலங்களவை Rajya Sabha தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது. இதில் ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி […]

இலங்கை

கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 5, 2026
  • 0 Comments

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள் படிவத்தை’ (Google Form) பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் தொடர்புகளைப் பேணுவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்குமே இந்தத் தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது. தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, […]

error: Content is protected !!