இலங்கை செய்தி

ஈரான் கப்பலுக்கு அடைக்கலம்: பொன்சேகா கூறுவது என்ன?

  • March 7, 2026
  • 0 Comments

“ஈரான் கப்பல்கள் விவகாரத்தில் இலங்கை சரியான முடிவையே எடுத்துள்ளது. சர்வதேச சட்டத்துக்கமையவே செயல்பட்டுள்ளது.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Sarath Fonseka தெரிவித்தார். “ இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை கடற் படையினர் மீட்டனர். இந்த நடவடிக்கை சர்வசதேச சமவாயங்களுக்கு உட்பட்டது. அப்பகுதியில் அமெரிக்க கப்பல் ஒன்று இருந்திருந்தால்கூட ஈரான் படையினரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். அதுதான் சர்வதேச சட்டம். எதிரணி […]

இலங்கை செய்தி

இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

  • March 7, 2026
  • 0 Comments

“இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். “ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு நாம் உடன்பட்டுள்ளோம். அந்தவகையில் மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை வழங்கினோம். தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயல்படுகின்றது. எனவே, தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. நாம் நடுநிலை கொள்கையுடன் செயல்படுவதால் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்படுகின்றோம்.” எனவும் அவர் கூறினார். அதேவேளை, ஈரான் மாலுமிகளின் சடலங்களை விரைவில் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூ அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர் அழைப்பு

  • March 7, 2026
  • 0 Comments

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்துள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான உறவுகள் குறித்த அழுத்தங்களுக்கு மத்தியில், ஒக்டோபரில் அவரது பட்டங்கள் பறிக்கப்பட்ட போதிலும், முன்னாள் இளவரசர் அரியணையில் எட்டாவது இடத்தில் உள்ளார். எப்ஸ்டீனுடன் இரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பின்னர், ஆண்ட்ரூ கடந்த மாதம் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்தார். அவர் எந்தத் […]

இலங்கை செய்தி

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பற்றி எரிந்த தீ

  • March 7, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இன்றையதினம் சனிக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் தாங்கி வண்டியொன்று எரிபொருள் விநியோகித்து கொண்டிருந்தபோதே தீப்பரவல் ஏற்பட்டது. எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் துரித செயற்பாட்டால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதன்போது யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவும் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. தீப்பரவல் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையம் கணிசமான சேதத்துக்குள்ளானது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத […]

உலகம் செய்தி

ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • March 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை இன்று மிகக் கடுமையாக தாக்குவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க இராணுவம் ஈரானில் புதிய இலக்குகளை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி, முதலில் தாக்கப்படாவிட்டால் அவர்களைத் தாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அறிவிப்பு நிலைமையில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது இன்னும் தெளிவாக இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகம்

” கப்பலை மூழ்கடித்தது போர்க்குற்றம்” – ஐ.நாவில் ஈரான் முறைப்பாடு!

  • March 7, 2026
  • 0 Comments

இந்து சமுத்திரத்தில் ஈரான் கப்பல்மீதான அமெரிக்காவின் தாக்குதல் போர்க்குற்றமாகும் என்று ஐ.நாவில் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். “ஈரானிய போர்க்கப்பலான தேனா சர்வதேச நீரில் தாக்கப்பட்டது. சுமார் 100 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ஒரு போர்க்குற்றத்தைச் செய்தது. இந்த கொடூரமான மற்றும் சட்டவிரோத தாக்குதல் சட்டம் மற்றும் கடல்வழி சுதந்திரத்தின் அடிப்படைக் கொள்கையின் கடுமையான மீறலாகும். மேலும், தனது நாட்டுக்கு […]

இந்தியா செய்தி

தங்கைகளின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் – மகளிருக்கான விஜயின் வாக்குறுதிகள்

  • March 7, 2026
  • 0 Comments

தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த உடன் 60 வயதை கடந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2500 ரூபா வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே விஜய் மகளிருக்கான வாக்குறுதிகளை அறிவித்தார். அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தங்கைகளின் திருமணத்திற்கும் அண்ணன் சீர் […]

அரசியல் இலங்கை செய்தி

போர் சூழலில் தேசிய பாதுகாப்பு குறித்து சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும்: சஜித்!

  • March 7, 2026
  • 0 Comments

“உலகில் போர் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒரு நாடாக நாம் நாடு குறித்தும், தேசிய பாதுகாப்பு குறித்தும் சிந்தித்து சமநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஒரு நாடாக, இன்று நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். பல ஆபத்துகளும் சவால்களும் நம்மை நோக்கி வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் தோள்களில் சுமந்து செல்லப்படும் வெள்ளை நிற சவப்பெட்டி – உருக வைத்த விழிப்புணர்வு

  • March 7, 2026
  • 0 Comments

லண்டன் நகரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள இளைஞர் மையமொன்றில், தோள்களில் சுமந்து செல்லப்படும் வெள்ளை நிற சவப்பெட்டியொன்று இறுதிச்சடங்கு போன்று தெரிந்தாலும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கலை நிகழ்வாகும் என சமூக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த சவப்பெட்டியின் உள்ளே, இரத்தக் கறைகள் படிந்த கத்தியின் வடிவில் உருவாக்கப்பட்ட பெரிய சிற்பமொன்று வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கத்தியின் மேல் லண்டன் நகரின் skyline வடிவம் செதுக்கப்பட்டிருப்பது காட்சியை மேலும் அதிர்ச்சியூட்டும்வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலைப்பணி, […]

இலங்கை செய்தி

லிய சக்தி’ பெண் தொழில்முனைவோர் சந்தை ஆரம்பமானது

  • March 7, 2026
  • 0 Comments

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “லிய சக்தி” (Liya Shakthi) பெண் தொழில்முனைவோர் சந்தை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் மாத்தறை கடற்கரைப் பூங்காவில் இன்று (07) ஆரம்பமானது. சுமார் 300 பெண் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை வழங்கும் இந்த “லிய சக்தி” தொழில்முனைவோர் சந்தை, இன்று (07) மற்றும் நாளை (08) ஆகிய இரண்டு நாட்களும் மாத்தறை கடற்கரைப் பூங்காவில் நடைபெறவுள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் […]

error: Content is protected !!