இலங்கையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை தொடர்பில் எச்சரிக்கை
இலங்கையில் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும், கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும், ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)





