ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அடுத்த கட்டமாக மேலும் 8 பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

இஸ்ரேல் நாட்டிற்குள் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ந்தேதி திடீரென புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

அதன்பின் ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. அதன்பின் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 6 வாரம் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். அத்துடன் ஹமாஸ்- இஸ்ரேல் இடையே பிணைக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை செய்யவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் ஹமாஸ் அமைப்பினர் முதற்கட்டமாக 3 பேரையும், 2வது கட்டமாக 4 பேரையும் விடுதலை செய்தது.

இந்த நிலையில் இன்று 3வது கட்டமாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களில் 8 பேரை விடுவித்துள்ளது.

இதில் 20 வயது ஆகம் பெர்கர் என்ற பெண் ராணுவ வீரர் ஆவார்.இவர் தனிமையில் முதலில் விடுவிக்கப்பட்டார்.

அதன்பின் 29 வயது அர்பெல் யெஹூத் , 80 வயது முதியவர் மற்றும் தாய்லாந்தை சேர்ந்த ஐந்து பேர் என மொத்தம் 8 பேரை விடுவித்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!