உலகம் செய்தி

கயானாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து : 20 குழந்தைகள் உயிரிழப்பு!

கயானாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இன்று (22) அதிகாலை,  கயானாவில் உள்ள பள்ளி விடுதியில் தீ பரவியதில் குறைந்தது 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் ஜார்ஜ்டவுனுக்கு தெற்கே 200 மைல் (320 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள  இடைநிலைப் பள்ளியின் விடுதிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அந்த தீயில் பல அழகான ஆன்மாக்களை இழந்துள்ளோம்” என்று அரசாங்கம் கூறியது. மேலும் பல மாணவர்கள் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், குறைந்தது ஏழு பேர் சிகிச்சைக்காக தலைநகருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில், விபத்து குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!