மஹிந்தானந்த எம்.பி தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துவிட்டது – குணதிலக்க ராஜபக்சவின மகன் முறைப்பாடு
![](https://iftamil.com/wp-content/uploads/2024/06/gunathilaka.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துள்ளதாக, குணதிலக்க ராஜபக்ச எம்.பியின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான தாக்குதல் காரணமாக தனது தந்தை தற்போது கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறுகிறார்.
இந்த தாக்குதலில் தனது தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு 4 மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குணதிலக்க ராஜபக்சவின் மகன் நிலுபுல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்ச காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தமை குறிப்பிடத்தககது.