இலங்கை செய்தி

மஹிந்தானந்த எம்.பி தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துவிட்டது – குணதிலக்க ராஜபக்சவின மகன் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கியதில் தனது தந்தையின் கால் உடைந்துள்ளதாக, குணதிலக்க ராஜபக்ச எம்.பியின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான தாக்குதல் காரணமாக தனது தந்தை தற்போது கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறுகிறார்.

இந்த தாக்குதலில் தனது தந்தையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு 4 மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குணதிலக்க ராஜபக்சவின் மகன் நிலுபுல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்ச  காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தமை குறிப்பிடத்தககது.

(Visited 27 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை