இலங்கை

எரிபொருளால் பாரிய இலாபத்தை ஈட்டும் அரசாங்கம் : மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி!!

எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் பாரிய இலாபத்தை ஈட்டுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான எரிபொருள் விலையை குறைக்கும் திறன் அரசாங்கத்திற்கு இருந்தாலும், ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டுவதற்காக அரசாங்கம் திட்டமிட்டு எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இணைய சேனல் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எரிபொருள் விற்பனையால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!