இலங்கை செய்தி

கோட்டாபயவின் உடற் பயிற்றுவிப்பாளா் ஹெரோயினுடன் கைது

இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோயினுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்க்கு  மிக நெருக்கமானவரான குறித்த சந்தேக நபா்  முன்னாள் ஜனாதிபதியின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் , கோட்டாபய   ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ்  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், யஹலதன்ன நெல்லிகல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர்.

ஹெரோயின் போதைப்பொருள் கடத்துவதாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  சந்தேகநபாின் வீட்டை  சோதனை செய்த போது  ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர்  கைது செய்யப்பட்டதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!