செய்தி

குரோமை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கூகுள்

உலகம் முழுவதும் பலரும் தங்களது செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில் பெரிதும் பயன்படுத்துவது கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை தான். இந்த நிலையில் கூகுள் பிரவுசரை விற்பனை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த நிலையில், அந்த நீதிபதியின் மூலமாகவே கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய சொல்ல வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்த உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அமெரிக்க நீதித்துறை கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டது. சட்ட சிக்கல்களை எல்லாம் கடந்து இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையை அரசு தரப்பு மேற்கொள்ள முயல்வதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் பயனர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!