இலங்கை செய்தி

பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகை

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இசை நிகழ்வு முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு , இதுவரை காலமும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேளை எவரும் நகை தொலைந்தமை தொடர்பில்

பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வராத நிலையில் , பொலிஸாரினால் நகை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. நகையை தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று

தமது நகை தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!