பொழுதுபோக்கு

கோட் படத்தால் நெருக்கடிக்கு உள்ளானாரா வெங்கட் பிரபு? விட்டதை பிடிக்க மாஸ்டர் பிளேன்

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகின.

இதனிடையே, அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் வெளியீடு திட்டமிடப்பட்டு வருகிறது.

தன்னுடைய தங்கை பவதாரணியின் மரணம் மற்றும் குடும்பத்தில் ஒரு சில சிக்கல்கள் காரணமாக இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா சரியாக செயல்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது யுவன் மீண்டும் தன்னுடைய கொண்டாட்டத்தை துவங்கியுள்ளார். அவரது கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் படத்தின் பாடல்களில் தவறவிட்டதை படத்தின் பிஜிஎம்மில் அவர் பிடித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே படத்தின் ட்ரெயிலர் வெளியீடு வரும் 19ம் தேதி என முன்னதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதிலிருந்து ஒரு நான்கு நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படத்தின் டிரைலர் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில் சுதந்திர தினத்தையொட்டி ட்ரெயிலர் ரிலீஸ் செய்யப்பட்டால் அது கண்டிப்பாக ஏராளமான ரசிகர்களை சென்றடையும் என்று தயாரித்து தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் ட்ரெய்லரில் இருக்க வேண்டும் என்றும் தயாரிப்பு தரப்பு வெங்கட் பிரபுவிடம் உறுதியாக கூறியுள்ளதாகவும் தற்போது அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் இந்த ட்ரெயிலர் சிறப்பாக வெளிக் கொண்டுவர வேண்டிய நெருக்கடியில் வெங்கட் பிரபு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content