பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக ஜெர்மனி அங்கீகரிக்காது – சான்சலர் அறிவிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக ஜெர்மனி அங்கீகரிக்காது என ஜெர்மனியின் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
கனேடிய பிரதமர் தற்போது ஜெர்மனிக்கு விஜயம் செய்து வருகிறார்.
கனடா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இருப்பினும், நேற்று நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், பாலஸ்தீனம் தனது நாடு முன்வைத்த நிபந்தனைகளை இன்னும் முன்வைக்காததால், அதை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க முடியாது என்று ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறினார்.
(Visited 9 times, 1 visits today)





