ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் நச்சுவாயு கசிவு : குறைந்தது 16 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவில்  நச்சு வாயு கசிந்ததன் காரணமாக மூன்று குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கு புறநகரில் உள்ள போக்ஸ்பர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜோகன்னஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் அதிகளவு கிடைப்பதால் அங்கு சட்டவிரோத சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும்போது இவ்வாறான வாயுக்கள் வெளியேறியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் நச்சுவாயு தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் முழுமையாகன தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறும் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாகவும், மீட்பு குழுவினர் குறித்த பகுதியை சென்றடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு