இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி ஏமாற்றும் கும்பல் – மூவர் கைது

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 லட்சம் ரூபாவை மோசடி செய்த காலி பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் உறுப்பினர்களையே இவர்கள் இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர், காலி பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பரின் கணக்கில் உரிய தொகையை வரவு வைத்துள்ளார்.

விசாரணைகளின் படி, டுபாயில் பணிபுரிந்து வரும் சந்தேகநபர், அவர் தற்காலிகமாக பணம் செலுத்திய கணக்கின் உரிமையாளரான பெண்ணும், நபரும் வந்த போது மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவரிடம் டுபாய் மற்றும் கட்டாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 8 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை