அரசியல் இலங்கை செய்தி

காலி மாநகர சபைக்குள் அடாவடி: ஐந்து அரசியல் வாதிகள் கைது!

காலி மாநகரசபை அமர்வின்போது அடாவடியில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் எதிரணி உறுப்பினர்கள் ஐவர், பொலிஸாரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபைக்குள் குழப்பம் விளைவித்து, மாநகர சபை செயலாளர் உட்பட அரச அதிகாரிகள்மீது தண்ணீர் வீசி தாக்குதல் நடத்தி அநாகரீகமாக நடந்துகொண்ட ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளை இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இவர்களை சட்ட நடவடிக்கையின் நிமித்தம் காலி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி மாநகரசபையானது தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ளது. காலி மாநகரசபையின் விசேட அமர்வு (30) நேற்று நடைபெற்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!