இலங்கை செய்தி

கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடுமையான  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலைமையினால் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாத நிலையில் மூன்று மாத காலத்திற்கு   விடுமுறை கோரியுள்ளதாகவும் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுகவீனமுற்றிருப்பதால் கட்சியின் தலைமைப் பொறுப்பும் நிர்வாகப் பொறுப்பும் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது வெளிநாட்டில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 30 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை