உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் மரணம்
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் ட்ரோன் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் புகைப்பட பத்திரிகையாளர் அன்டோனி லாலிகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார்
மேலும், அதே தாக்குதலில் உக்ரைனிய பத்திரிகையாளர் ஜார்ஜி இவான்சென்கோ காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்..
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ட்ருஷ்கிவ்கா பகுதிக்கு அருகில் இரு நிருபர்களும் இருந்தனர் என்று உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)





