திருகோணமலையில் இலவச மருத்துவ முகாம்!
இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச வைத்திய முகாம் இன்று (24) திருகோணமலை 22வது படைப்பிரிவில் நடை பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் இலவச வைத்திய முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது.
இம்மருத்துவ முகாமில் எலும்பியல் மருத்துவ சேவை, கல் வைத்திய முகாம், பல் வைத்திய முகாம் , கண் வைத்திய பரிசோதனை போன்ற பரிசோதனைகள் இடம்பெற்றது.

இந்த இலவச வைத்திய முகாமில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த வைத்திய முகாமில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.









