செய்தி விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து போட்டியை கண்டு களித்த இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மும்பையில் டென்னிஸ் பால் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்ததாக தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து போட்டியை காண ரிஷி சுனக் வருகை தந்தார். அங்கு இரு அணிகளின் கேட்பன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜாஸ் பட்லரை சந்தித்து பேசிய ரிஷி சுனக், ஆட்டத்தை உற்சாகத்துடன் கண்டு களித்து வருகிறார்.

(Visited 58 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!