இலங்கையில் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் திருநங்கை!
இலங்கை சோசலிஸ்ட் கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா, இலங்கையில் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
நிமேஷா கேகாலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்தேன்” எனக் கூறியுள்ளார்.





