இலங்கை செய்தி

எல்ல நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

எல்ல நகரில் இன்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எல்ல நகருக்கு அருகில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த ஒருவர் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா ஹோட்டல் ஊழியர் ஒருவர் சுடப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை