இலங்கை செய்தி

வீட்டை கொளுத்திய தந்தை: 13 வயது மகள் பலி! மேலும் நால்வருக்கு எரிகாயம்!

update

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

…………….

முதலாம் இணைப்பு

வீட்டை கொளுத்திய நபரும், அவரது 13 வயது மகளும் பரிதாபகரமாக உயிரிழந்த துயர் சம்பவமொன்று அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் நபரின் மனைவி , மாமியார், மகன், மகள் ஆகியோரும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது மூன்று பிள்ளைகளுடன் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை  அங்கு சென்ற கணவன், பெற்றோல் ஊற்றி வீட்டை கொளுத்தியுள்ளார் என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவருகின்றது.

இதன்போது ஏற்பட்ட தீயில் சிக்கி அவரும், 13 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

மனைவி (36) , மாமியார் (66), மகள் (15), மகன் (21) ஆகியோர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின்போது மகன் வீட்டுக்குள் இருக்கவில்லை எனவும், வீடு தீப்பிடித்தவேளை குடும்ப உறுப்பினர்களை காப்பாற்ற முற்பட்டபோதே அவர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!