இலங்கை

மனைவி வெளிநாட்டில் – இலங்கையில் மகளின் கண் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட தந்தை

திஸ்ஸமஹாராம, உடுவில பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 44 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உடுவில, வீரவில, மெதகிரிபுர பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க கன்கனம்கே இந்திரகுமார என்பவர் உயிரிழந்தார்.

அவரது மனைவி வெளிநாடு சென்ற பிறகு, தனது கள்ள காதலியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கள்ளக் காதலியின் கணவர் இந்தக் கொலைக்கு தொடர்புடைய சந்தேக நபராக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வெட்டுக்காயங்களுடன் மெதகிரிபுர பகுதியில் விழுந்து கிடந்த சந்தேக நபரை பொலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர் தனது 9 வயது மகளின் கண்முன்னே சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content