ஐரோப்பா

பிரபல ரஷ்ய பெண் பத்திரிகையாளரைத் தாக்கி மொட்டை அடித்து கொடூரம்!

ரஷ்யாவின் செச்சன்யா குடியரசின் வருகையின்போது பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பிரபல பெண் பத்திரிகையாளர் யெலினா மிலாஷினா மற்றும் வழக்கறிஞர் அலெக்ஸாண்டர் நெமோவ் ஆகியோர், செச்சென் தலைநகர் Groznyக்கு வருகை தந்தனர்.

செச்சென் ஆர்வலரின் தாயாரின் நீதிமன்ற விசாரணையில் கலந்துகொள்ள அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில், ஆயுதமேந்திய குழு ஒன்றால் அவர்களின் கார் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மிலாஷினா/Milashina

அதனைத் தொடர்ந்து, அந்த குழு மிலாஷினா மற்றும் நெமோவ்வை துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டி பலமாக தாக்கியுள்ளது. மேலும், மிலாஷினாவின் தலையை தாக்குதல்தாரிகள் மொட்டையடித்து, பச்சை நிற சாயத்தினை பூசியுள்ளது.

அத்துடன் அவர்கள் வைத்திருந்த தனிப்பட்ட மின்னணு சாதனங்களையும் அந்த கும்பல் கைப்பற்றி அழித்ததாக CAT கூறியது. இந்த தாக்குதலுக்கு பின்னர் மிலாஷினா மற்றும் வழக்கறிஞர் நெமோவ் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்