விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருக்கு பந்து வீச தடை

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களிடம் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும் முயற்சியில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் விளையாடும் திறனை கண்காணித்து வருகிறது. இதில் சில வீரர்களின் பந்து வீசும் முறை ஆட்சேபனைக்கு உரியதாகவும், முறையற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடக அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் மனீஷ் பாண்டே விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசாததால் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்து வீசுவதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.

முழு நேர பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய அவர் அவ்வப்போது பகுதி நேர பவுலராக பந்து வீசுவது வழக்கமாகும். எனினும் அவருடைய பவுலிங் விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது.

எனினும் எதிர்காலத்தில் தனது பந்து வீசும் முறையை சரி செய்து வந்தால் அவர் மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!