ஆசியா

சிங்கப்பூரில் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க மாத கணக்கில் காத்திருக்கும் குடும்பங்கள்

சிங்கப்பூரில் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க குடும்பங்கள் பல மாதங்களாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசிய நாட்டை சேர்ந்த பணிப்பெண்களை வேலைக்கு எடுத்தால் அவர்கள் வருகைக்காக சுமார் 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

அந்நாட்டில் எல்லை விதிமுறைகள் கடுமையான காரணத்தால் இந்த கால அவகாசம் எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அதிகமான குடும்பங்கள் இந்தோனேசிய பணிப்பெண்களை நம்பி உள்ளனர்.

ஏனென்றால் அவர்களின் தேவை என்பது சிங்கப்பூரில் அதிகமாவே உள்ளது. அந்நாட்டில் விதிக்கப்படும் எல்லைக்கட்டுப்பாடுகள் காரணமாக பணிப்பெண்கள் அதிகமான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும், பணிப்பெண்கள் நாட்டை விட்டு இங்கு வரும் முன்னர், அவர்களுக்கான தூதரக ஒப்பந்தத்தை நிறுவனங்கள் பெற வேண்டும் என்பதும் கட்டாயம்.

அதன் காரணமாக அதிக காலம் எடுப்பதாக வேலைக்கு எடுக்கும் ஏஜெண்டுகள் கூறுகின்றனர். இருப்பினும் எல்லா நிறுவனங்களுக்கும் இந்த பாதிப்பு இருக்காது என்பது கூடுதல் தகவல்.

பணிப்பெண்கள் தொடர்ந்து வருவார்கள் எனவும், அவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகின்றது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content