இலங்கை செய்தி

அஞ்சல் இணையதளம் போன்ற போலி இணையதளம் – பல லட்சம் மோசடி

தபால் துறையின் இணையதளத்தை போன்று இணையதளம் அமைத்து கூரியர் சேவை வழங்குவதாக கூறி ஆன்லைன் வங்கி முறை மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு பணத்தை மோசடி செய்தமை குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (25) கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் இந்த விடயத்தை அறிக்கை செய்தது.

தபால் மா அதிபரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் தபால் துறை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது வெளியாட்கள் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி, பணத்தை வரவு வைத்து கணக்குகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குமாறு வங்கிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு ஒரு பார்சல் கிடைத்ததாக அவர்களின் கைபேசியில் குறுஞ்செய்தி வரும், அந்த செய்தியின் மூலம் சம்பந்தப்பட்ட இணையதளத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படும்.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு தகவல் ஆன்லைனில் பெறப்பட்டது. அப்போது அந்த தகவல் மூலம் வாடிக்கையாளர்களின் கணக்கு பணம் லட்சக்கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

225,918.36 ரூபா மற்றும் 297,130.81 ரூபா மோசடி தொடர்பில் இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த நீதவான், கணக்குகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!