இலங்கை செய்தி

திருமணத்திற்குப் புறம்பான உறவு!! பரிதாபமாக உயிரிழந்த நபர்

இரத்மலானை புகையிரத வீடமைப்புத் தொகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர் கே.இந்திக்க ஹேமந்த என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை (11) இறந்தவர், திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்ட பெண்ணுடன் வெறிச்சோடிய வீட்டுக்குள் சென்றுள்ளார்.

பெண்ணின் கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.

அங்கு தங்கியிருந்த நபரை பல தடவைகள் கூரிய ஆயுதத்தால் மார்பில் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

வாள்வெட்டுச் சம்பவத்தை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நாளை (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content