அரசியல் இலங்கை செய்தி

அடக்கி ஆள்வதற்கா அவசரகால சட்டம்?

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ நாட்டில் அவசரகால சட்டம் அமுலில் உள்ளது. எனினும், எந்தவொரு கட்டத்திலும் அச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை.

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக ஒடுக்கமுறை
கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது.

ஊடகங்கள் என்னை விமர்சித்தால்கூட அது பற்றி நான் கவலை அடையமாட்டேன். ஏனெனில் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் இயலுமை எனக்கு உள்ளது.” – என்றார்.

அதேவேளை, ஊடகங்களுக்கு எதிராக அடக்குமறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!