ஐரோப்பா

துருக்கியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம் – கட்டடங்களிலிருந்து கீழே குதித்த 150 பேர் காயம்

துருக்கி – இஸ்தான்புல் நகரை நிலநடுக்கம் உலுக்கியபோது கட்டடங்களிலிருந்து கீழே குதித்த சுமார் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் பதற்றத்தில் அவ்வாறு செய்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எனினும் யாருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அந்நகரில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான சேதங்கள் ஏற்பட்டதாக எந்த உடனடித் தகவலும் இல்லை.

இஸ்தான்புல் பக்கத்தில் உள்ள சில மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் 13 விநாடிகள் நீடித்ததாகவும் 50க்கும் அதிகமான பின்னதிர்வுகள் நேர்ந்ததாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!